Wednesday, August 14, 2013

நீயும் மழையும்

பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் ....

மழை நின்ற மரகிளையில்........

மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,

நீ வீசிப்போன காதல் மழையில் 

துளி துளியாய் ........

வீழ்ந்துகொண்டேயிருக்கிறது உன்  " நினைவுகள்" ....!

காதலியின் கேள்வி.....

"உனக்கு நான் பெரிதா ...
உன் நட்பு பெரிதா ? " -- என் காதலியின் கேள்வி .
"பெண்ணே என்  நட்பு என் சுவாசவும்,

 நீ என் இதய துடிப்புமாகிறாய்"-- என் பதில் ......!    

நண்பனின் கேள்வி

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும் 


எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
 நட்பு தான்..............!

ஆணின் மனம்

பாதி திறந்த கதவு .........
அனுமதி தேவையில்லை
நுழைவதர்க்கு .................!

பெண்ணின் மனம்

பூட்டிவைத்த "பீரோ "
அனுமதி "சாவி"
இருப்பவனுக்கு மட்டும் ...!

என் காதல்

வரண்ட  மண்ணில்
அடித்த சுனாமி
"உயிர் " போய்விட்டது
அலைகள் இன்னும் ஓயவில்லை....!

புத்தகம்

படிக்கதெரியாதவன் "கனவு"
படித்தும் புரியாதவனின் "சுமை"
நேசிப்பவனுக்கு "நண்பன்"
சுவாசிப்பவனுக்கு :உயிர்"...!

அவள் .....

கோபத்தில் நிலவும்
பாலையில் பசுமையும்
அழுகையில் கண்ணீரும்
பாசத்தில் தாயாகவும்
நிலைத்து நின்ற
மூன்றெழுத்து காவியம் .....

பாபிகள் நாம் ....

காமம் ஒரு பாப்பம் என்றால் ....
நீயும் நானும் பாபிகள்தான்...........!

சிரிப்பும் ஏனோ ..? அழுகை ஏனோ ..?
உடல் சலிக்கும்போதும் பாபம்தான் .....!

சிறகுகள் இல்லை .....சிந்தனை இல்லை ...
பாபிகள் மட்டும் வாழ்வது ஏனோ ?

உண்மை வேறு ...பொய்களும் வேறு ....
பாப்பம் மட்டும் துடர்வது  ஏனோ ?

இங்கே ....

காழ்சிகள் வேறு ...கனவுகள் வேறு ...
காமம் மட்டும் கலைவதுதானோ ?....